‘எம்பிகளின் சலுகைகளை நிறுத்துங்கள்’

புதுடெல்லி: நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் உள்ளிட்ட பிற சலுகைகளை நிறுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்குப் பதில் அளிக்குமாறு கேட்டு மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஊதியம் தவிர பேருந்து, ரயில், விமானத்தில் செல்ல சலுகைகள் வழங்கப்படுகின்றன. இலவசத் தொலை பேசி வசதி, நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்றால் தினப்படி உட்படப் பல்வேறு சலுகைகள் வழங்கப் படுகின்றன. இந்நிலையில் ஓய்வூதியம் உட்பட சலுகைகளை நிறுத்தக் கோரி என்ஜிஓ சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி ஜே.செலமேஸ்வர் தலைமையிலான அமர்வு மக்களவை மற்றும் மாநிலங்களவை பொதுச் செயலாளருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!