இலங்கை கடற்படை தாக்குதல்: மீனவர்கள் மத்தியில் அச்சம்

ராமேசுவரம்: இலங்கை கடற்படையினருக்கு அஞ்சி தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லத் தயங்குவதாக செய்தி வெளியாகியுள்ளது. அண்மைக்காலமாக தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. பிரிட்ஜோ என்ற மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும் பல மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். இதனால் மீனவர்கள் மத்தியில் அச்சம் நிலவுவதால், நேற்று முன்தினம் ராமேசுவரத்தில் இருந்து இருநூறுக்கும் குறைவான படகுகளே கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றன. ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 800க்கும் மேற்பட்ட படகுகள் மீன்பிடிக்க அன்றாடம் கடலுக்குச் செல் வது வழக்கம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!