பழநி: சுகாதாரக்கேட்டால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது பழநி நகரம். அந்நகரத்தின் மக்கள் மர்ம காய்ச்சல் நோயால் பாதிப்புக்குள் ளாகி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பழநி நகரில் கடந்த ஒரு மாத காலமாக காய்ச்சல் பாதிப்பால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின் றனர். பழநி அரசு மருத்துவமனை யிலும் தனியார் மருத்துவமனை களிலும் சிகிச்சை பெற்ற சிலர், மேல் சிகிச்சைக்காக மதுரை, கோயம்புத் தூர் போன்ற ஊர்களில் உள்ள பெரிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வறட்சியான நிலையில் வேக மாக காய்ச்சல் பரவுவதற்கு நகரில் ஏற்பட்டுள்ள சுகாதாரச் சீர்கேடு முக்கிய காரணமாகும். பழநி நகரின் நடுப்பகுதியில் அமைந் துள்ள வையாபுரி கண்மாயில் ஹோட்டல்கள், குடியிருப்புப் பகுதி களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தேங்குகிறது. கண்மாய்க் கரையில் இறைச்சிக் கழிவுகள், குப்பைகள் கொட்டப்படுகின்றன. அங்கு பன்றிகள் நடமாட்டம், கொசு பெருக்கத்தால் நோய்கள் தாண்டவமாடுகின்றன. இதனால் அங்குள்ள புகழ்பெற்ற முருகன் கோயிலுக்கு வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களின் எண் ணிக்கை கணிசமாகக் குறைந் துள்ள தாகக் கூறப்படுகிறது. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா நாளை மறு நாள் (ஏப்ரல் 3) தொடங்கி ஏப்ரல் 12 வரை நடக்கிறது.