சென்னை: சென்னையில் உள்ள தனியார் பள்ளிக்கு எதிராக பெற் றோர்கள் ஆர்ப்பாட்டத்தில் குதித்த தால் அவ்வட்டார மக்கள் அதிர்ச்சி யடைந்தனர். சிபிஎஸ்இ அங்கீகாரம் பெற்று உள்ளதாகக் கூறி கொடுங்கை யூரில் உள்ள தனியார் பள்ளி தங் களை ஏமாற்றிவிட்டதாகப் பெற் றோர் குற்றம்சாட்டினர். வேளாங்கண்ணி பொதுப் பள்ளியில் எல்கேஜி முதல் இரண் டாவது வரை வகுப்புகள் நடைபெறு கின்றன. இந்த நிலையில் 'சிபிஎஸ்இ' அங்கீகாரம் பெற்ற பள்ளி என்று விளம்பரப்படுத்தி நிர்வாகத்தினர் கூடுதல் கட்டணம் வசூலித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் இன் னமும் அங்கீகாரம் கிடைக்காத தால் பெற்றோர் ஆத்திரமடைந்தனர். இதையடுத்து பள்ளி வளாகத் துக்கு முன் கூடிய பெற்றோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்று 'டெக்கான் குரோனிக்கல்' குறிப்பிட்டது. முன்னதாக மாணவர் ஒரு வரின் பெற்றோர், மாற்று சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்திருந்தார்.
பள்ளிக்கு வெளியே இடம்பெற்ற காட்சி. படம்: டெக்கான் குரோனிக்கல்