வேலூர்: வேலூரில் காட்பாடி அருகே கோரந்தங்கல் என்ற இடத்தில் அரைகுறையாகக் கட்டப் பட்டிருந்த தனியார் நிறுவனத்துக் குச் சொந்தமான பள்ளி கட்டடம் நேற்று இடிந்துவிழுந்தது. இதில் மூவர் படுகாயம் அடைந் தனர். ஆனால் இடிபாடுகளில் 20 பேர் சிக்கியுள்ளனர். சம்பவத்தன்று புதிதாகக் கட்டப்படும் பள்ளி கட்டட கட்டு மானப் பணிகளில் 20க்கும் மேற் பட்டோர் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று தொடர்ந்து கட்டுமானப் பணிகள் நடைபெற்றபோது எதிர்பாராதவித மாக கட்டடத்தின் ஒரு பகுதி அப்படியே சரிந்து விழுந்தது.
இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஊழியர்கள். படம்: இந்தியா டுடே