புதுடெல்லி: ஈராக்கில் பிறந்த குழந்தையின் கூடுதல் கை, கால்களை இந்திய மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் வெற்றி கரமாக அகற்றியுள்ளனர். கரம் என்னும் அந்த ஏழு வயதுக் குழந்தை பிறக்கும்போதே நான்கு கைகள், நான்கு கால்களுடன் பிறந்தது. ஆனால், இயல்பான கை, கால்கள் தவிர கூடுதலா னவை வளர்ச்சியற்று இருந்தன. அந்தக் குழந்தையுடன் சேர்ந்து மற்றொரு குழந்தையும் கருவில் வளர்ந்தது.
ஆயினும், அந்த இரண்டாவது கருவின் வளர்ச்சி குன்றியதன் காரணமாக அதன் வளர்ச்சியற்ற பாகங்கள் குழந் தையுடன் இணைந்து இருந்தன. அந்த கூடுதல் பாகங்களை அகற்றுவது சிரமமான பணி என் பதால் அதற்குப் பொருத்தமான மருத்துவர்களைத் தேடி வந்த கரமின் தந்தை இந்தியத் தலை நகருக்குப் பறந்தார். புதுடெல்லி யின் ஜேபீ மருத்துவமனையின் மருத்துவர்கள் மூன்று கட்டங் களாக அறுவை சிகிச்சை நடத்தி குழந்தையின் தேவையற்ற கை, கால்களை வெற்றிகரமான அகற்றி உள்ளனர்.
அறுவை சிகிச்சைக்குப் பின்னர் தாய் மடியில் கரம். படம்: ஏஎஃப்பி