இரட்டை இலைச் சின்னத்தைக் கைப்பற்றுவதற்காக லஞ்சம் கொடுத்ததாக அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மீது டெல்லி போலிஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. இவ்விவகாரம் தொடர்பில் சுகேஷ் சந்திரசேகர் என்பவன் இடைத்தரகராகச் செயல்பட்ட தாகக் கூறப்படுகிறது. அவனைக் கைது செய்த போலிசார், அவனிடமிருந்து புதிய 2,000 ரூபாய் நோட்டுகளாக ரூ.1.3 கோடி ரொக்கத்தையும் இரு விலை உயர்ந்த கார்களையும் பறிமுதல் செய்தனர்.
மேலும், எப்பாடுபட்டேனும் இரட்டை இலைச் சின்னத்தைத் தன்வசமாக்கிவிட வேண்டுமென தினகரன் முயன்றதாகவும் இதற் காக 60 கோடி ரூபாய் வரை லஞ்சம் தர அவர் தயாராக இருந்ததாகவும் கூறப்பட்டது.
அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளரான டிடிவி தினகரன். படம்: இணையம்