2,000 போலி வங்கிக் கணக்குகள்

லக்னோ: சிபிஐ அதிகாரிகள் கடந்த ஜனவரி மாதம் உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி நகர ஸ்டேட் வங்கிக் கிளையில் திடீரென சோதனை நடத்தினர். ரூபாய் நோட்டுகள் மதிப் பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர் அங்கு 2,000க்கும் மேற் பட்ட போலி கணக்குகள் தொடங்கப்பட்டதை அவர்கள் கண்டறிந்தனர். அந்த வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்தி பல கோடி ரூபாய் கணக்கில் வராத பணத்தை சிலர் வெள்ளையாக்கி உள்ளனர். இதற்கு, வங்கி அதிகாரிகள் உடந்தையாக இருந்துள்ளனர். இது தொடர்பாக வங்கி அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. புதிய கணக்குகள் தொடங்கியது மட்டுமல்லாமல் ஏற்கெனவே செயல்படாமல் இருந்த கணக்குகளையும் கறுப்புப் பணத்தை மாற்ற அவர்கள் பயன்படுத்தியதாக சிபிஐ தெரிவித்துள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!