சென்னை: அதிமுகவை அழிக்க பாஜக முயற்சிப்பதாக சசிகலா தரப்பைச் சேர்ந்த நாஞ்சில் சம்பத் குற்றம்சாட்டி உள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவில் நிலவும் குழப்பங்களின் பின்னணியில் பாஜக உள்ளது என்றார். "இந்தியா முழுவதும் பாஜகவின் கொடியைப் பறக்கவிட வேண்டும் என பாஜகவினர் ஆசைப்படுகிறார்கள். அதிமுகவை அழிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இது ஒரு கலாசார யுத்தம்," என்றார் நாஞ்சில் சம்பத். தமிழகம் காலம் காலமாக ஒரு தீவாகத்தான் இதுவரை இருந்து வந்தி ருப்பதாகக் குறிப்பிட்ட அவர், தமிழகத் தில் பாஜக காலூன்றுவது மிகக் கடி னம் என்றார்.
"தமிழகம் பெரியாரின் பூமி. அண் ணாவின் நந்தவனம். எம்ஜிஆரின் தோட்டம். ஜெயலலிதாவின் கோட்டை. இதனை கட்டிக்காக்கும் தலைமை பொறுப்பு டிடிவி தினகரனுக்குத்தான் இருக்கிறது. "தமிழகத்தில் ஆட்சியைக் கவிழ்த் துக் காட்டுவோம் என தமிழக பாஜக தலைவி தமிழிசை சவுந்தரராஜன் தனது நண்பரிடம் பந்தயம் கட்டி யுள்ளார்," என்றார் நாஞ்சில் சம்பத். அதிமுகவுக்கு தினகரன் தலைமை ஏற்பதே சரியாக இருக்கும் என்று குறிப்பிட்ட அவர், 33 ஆண்டுகளாக ஜெயலலிதாவுடன் இருந்த சசிகலாவை யும், அவரது குடும்பத்தினரையும் ஒதுக்கி வைக்கும் முடிவு ஏற்புடை யதல்ல என்றார்.