இந்தியாவின் புராதன மொழியான தமிழ் மொழி ஒரு சிறந்த மொழி என்றும் அதை இந்தியாவின் பிற மாநிலங்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி இருக்கிறார். தமிழகத்தோடு பிற மாநிலங் கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும் என் றும் அதன் மூலம் தமிழ் வாக்கியங் களை அந்த மாநிலங்கள் கற்க வேண்டும் என்றும் தமிழ் எழுத்து களை அவை அறிந்துகொள்ள வேண்டும் என்றும் பிரதமர் வேண்டுகோள் விடுத்தார்.
'ஒரே இந்தியா, சிறந்த இந்தியா' என்ற முழக்கவாசகத்தின் கீழ், மாநிலங்கள் இணைந்து செயல்படவேண்டியதன் அவசியம் குறித்து திரு மோடி பேசும் காணொளி அவரது டுவிட்டர் பக்கத்தில் ஞாயிறு இரவில் வெளியிடப்பட்டது. அதில் தமிழ் மொழியின் அவசியம் பற்றி பிரதமர் கருத்து தெரிவித்தார். இந்தியப் பன்முகத்தன்மையே நாட்டின் பெருமை எனப் புகழ்ந்த திரு மோடி, "வேற்றுமையில் ஒற்றுமை என்பதே இந்தியாவின் பலம். நாட்டின் மதிப்பும் அதில் அடங்கியுள்ளது," என்றார். "இந்திய மொழிகளில் தமிழ் மொழி பழமையானது. தமிழ் ஒரு சிறந்த மொழி. இந்தியாவின் பழமையான தமிழ் மொழி இந்தியா வின் செழுமிய கலாசாரத்தில் மிகப் பெரும் பங்காற்றியுள்ளது.