ஓபிஎஸ், எடப்பாடி அணிகள் இடையேயான சமரச முயற்சி

சென்னை: பிளவுபட்டு நிற்கும் அதிமுகவை ஒருங்கிணைக்கும் முயற்சிகள் நீடித்துவரும் போதி லும், இரு அணிகளும் திடீர் திடீரென முன்வைக்கும் பல்வேறு நிபந்தனைகள் காரணமாக சமரசப் பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. தற்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுகவினர் இரு அணிகளாகச் செயல்பட்டு வரு கின்றனர். இந்நிலையில் அமைச் சர் விஜயபாஸ்கர் வீட்டில் வரு மான வரித்துறை மேற்கொண்ட அதிரடி சோதனைக்குப் பின்னர் காட்சிகள் வேகமாக மாறின. மேலும், இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்காக தினகரன் ரூ.50 கோடி வரை லஞ்சமாகத் தர முன்வந்தார் எனும் குற்றம்சாட்டும் எழவே, அதிமுகவில் இருந்து சசிகலா குடும்பத்தாரை ஒட்டுமொத்தமாக விலக்கி வைப்பதாக முதல்வர் எடப்பாடி தரப்பு அறிவித்தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!