திமுக: தமிழகத்தில் பாஜக காலூன்றுவது பகல் கனவு

சென்னை: தமிழகத்தில் பாஜகவை காலூன்ற வைக்க முடியும் என்று நினைத்தால் அது பகல்கனவாகவே முடியும் என்று திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் தெரி வித்துள்ளார். திமுக மற்றும் பிற கட்சிகள் இணைந்து நடத்திய முழு அடைப்புப் போராட்டம் குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் சில கருத்து களைத் தெரிவித்திருந்தார். இதற்குப் பதிலளிக்கும் வகை யில் துரைமுருகன் நேற்று வெளி யிட்ட அறிக்கையில், "திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகள் இணைந்து நடத்திய போராட்டம், மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் வெற்றி பெற்றிருப்பதை தமிழிசை சௌந்தர்ராஜனால் பொறுத்துக் கொள்ளமுடியாமல் கதைக்கு உத வாத வாதங்களை முன்வைக் கிறார்," என்று குறிப்பிட்டுள்ளார். காவிரி விவகாரத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் நடத்திய சட்டப் போராட்டங்களையும் பெற்ற வெற்றிகளையும் மறந்துவிட்டு தமிழிசை பேசியிருப்பதாக துரை முருகன் கூறியுள்ளார்.2017-04-27 06:00:00 +0800

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!