கிழக்கு=மேற்கு ரயில் பாதையின் மேற்குப் பகுதியில் நான்கு புதிய நிலையங்கள் ஜூன் மாதம் திறக்கப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. 7.5 கிலோ மீட்டர் நீளமுள்ள புதிய துவாஸ் வெஸ்ட் ரயில் பாதை நீட்டிப்பு ஜூன் 18ஆம் தேதியன்று சேவையைத் தொடங்கும். ஜூன் 16ஆம் தேதியன்று துவாஸ் ரயில் பாதை நீட்டிப்பின் முன்னோட்டம் நடைபெறும். புதிய நான்கு நிலையங்களும் நண்பகல் 12 மணியிலிருந்து இரவு 8 மணி வரை பொதுமக்களுக்குத் திறந்துவிடப்படும்.
குல் சர்க்கிள், துவாஸ் சர்க்கிள், துவாஸ் வெஸ்ட் ரோடு, துவாஸ் லிங்க் ஆகிய நான்கு நிலையங்கள் ஜூ கூன் நிலையத்தை அடுத்து வருபவை. அவை அனைத்தும் தரைக்கு மேல் கட்டப்பட்டுள்ள எம்ஆர்டி நிலையங்கள். இந்தப் புதிய நிலையங்களை 100,000 பயணிகள், குறிப்பாக ஜூரோங் மற்றும் துவாஸ் தொழிற் பேட்டைகளில் பணிபுரியும் ஊழியர்கள் நாள்தோறும் பயன்படுத்துவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.