தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் குறைந்தது

சென்னை: கடந்த சில நாட்களாக தமிழகத்தில் சுட்டெரித்து வந்த கோடை வெயிலின் தாக்கம் சற்றே குறைந்துள்ளது. தற்போது கடல் காற்று வீசுவதே வெப்பம் குறைய காரணம் என வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஏப்ரல் மூன்றாவது வாரத்தில் கோடை வெயிலின் உக்கிரம் உச்சத்தில் இருந்தது. கடந்த பதினாறு ஆண்டுகளில் இல்லாத வகையில் வெயில் சுட்டெரித்தது. இந்நிலையில், கடல் காற்றும், தரைக் காற்றும் மாறி மாறி வீசுவதால் வெப்பத்தின் அளவு கடந்த இரு தினங்களாகக் குறைந்துள்ளது. அடுத்த சில தினங்களுக்கு வெயிலின் தாக்கம் குறைந்திருக்கும் என வானிலை நிபுணர்களின் தகவலால் தமிழக மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!