சீறிப் பாய்ந்த கடல் அலைகள்: பீதியடைந்த சுற்றுலா பயணிகள்

குமரி: திடீரென ராட்சத அலைகள் எழுந்ததால் கன்னியா குமரி கடற்பகுதியில் கூடியிருந்த நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பீதி நிலவியது. கடந்த சில நாட்களாகவே இக்கடற்பகுதி சீற்றத்துடன் காணப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இங்குள்ள சின்ன குருசடி பகுதியில் கடலில் 10 அடிக்கு மேல் ராட்சத அலைகள் எழுந்து கரையை நோக்கிச் சீறிப் பாய்ந்தன. காலை தொடங்கி மாலை வரை கடல் சீற்றத்துடனேயே காணப்பட்டது. இதனால் கடலில் குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் பயத்தில் அலைகளை விட்டு விலகிச் சென்றனர். இச்சமயம் அங்கு வந்த போலிசார் கடலில் குளிக்க வேண்டாமென சுற்றுலா பயணிகளை எச்சரித்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!