தமிழகத்தில் மதுக்கடைகளுக்கு எதிராகப் போராடுபவர்களைக் கைது செய்யக்கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது. அத்துடன், இதுவரை கைதா னவர்களை உடனடியாக விடு விக்குமாறும் அவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்தும் நீதிமன்றம் ஆணை பிறப்பித்து உள்ளது. சென்ற மாதம் 29ஆம் தேதி சென்னை திருமுல்லைவாயில் பகுதியில் மதுக்கடையை முற்று கையிட்டுப் போராட்டம் நடத் திய நாம் தமிழர் கட்சியினர் 21 பேரை போலிஸ் கைது செய்து சிறையில் அடைத்தது. இந்நிலையில், அவர்களில் ஒருவரான பிரசன்னா என்பவர் தன்னுடைய தாயார் இறந்துவிட்ட தால் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காகத் தன்னை பரோலில் விடக் கோரி புழல் சிறைக் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தார்.
அதற்குச் சிறை நிர்வாகம் எந்தப் பதிலும் அளிக்க வில்லை. இதையடுத்து, அவர்கள் 21 பேரும் பிணை கோரி கீழ் நீதிமன்றத்தில் மனு அளித்தனர். அங்கு தங்களுக்குப் பிணை கிடைக்காததால் அவர்கள் உயர் நீதிமன்றத்தை நாடினர். நீதிபதிகள் கிருபாகரன், பார்த்திபன் ஆகியோர் அடங்கிய அமர்வு அம்மனுவை நேற்று முன் தினம் அவசர வழக்காக ஏற்றுக் கொண்டு விசாரித்தது. அப்போது, "மதுக்கடைக்கு எதிராகப் போராடியவர்களை ஏன் சிறையில் அடைக்கவேண் டும்? மதுக்கடைகளின் பெயர்ப் பலகைகளை உடைப்பது ஒரு குற்றமா?" என்று நீதிபதிகள் கடுமையாகச் சாடினர்.
"நீதிமன்றத்திற்கு வராத சிறைத்துறையினர் என்ன நாட் டின் அதிபரா? அல்லது அமெ ரிக்க அதிபரா?" என்று சாடிய நீதிபதிகள், கைதானவரை பரோலில் விடாததால் அவருக்கு இழப்பீடு வழங்குமாறும் ஆணை இட்டனர். மேலும், கைதான நாம் தமிழர் கட்சியினர் 21 பேர் மீதான வழக்குகளை ரத்து செய்து, அவர்களை உடனடியாக விடுதலை செய்யவும் நீதிபதிகள் ஆணை பிறப்பித்தனர்.