ஆட்குறைப்பில் இறங்கும் ‘ஐடி’ நிறுவனங்கள்

பெங்களூரு: தகவல் தொழில் நுட்பத் துறை எதிர்பாராத அள வுக்கு வீழ்ச்சி கண்டுள்ளது. அமெரிக்காவின் ஐடி நிறுவனங் களில் அமெரிக்கர்களையே பணி களில் அமர்த்த வேண்டிய சூழலும் நிலவுகிறது. இதுபோன்ற காரணங் களால் இந்தியாவில் பல ஐடி நிறு வனங்கள் ஆட்குறைப்பு நடவடிக் கையில் இறங்கியுள்ளன. இதனால் பல்லாயிரக்கணக்கானோர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 2008ஆம் ஆண்டுக்குப் பிறகு இப்போதுதான் அதிக அளவில் ஆட்குறைப்பு செய்யப்படவுள்ளது. பெரும்பாலும் உயர் பதவிகளில் இருப்பவர்களும் பல ஆண்டு களாகப் பணிபுரிபவர்களும் வேலை இழக்கக்கூடும். பல நிறுவனங்கள் கட்டாய ஓய்வுத் திட்டத்தையும் அறிவித்துள்ளன. ஐடி நிறுவனங்களின் நடவடிக் கைகளுக்கு எதிராக சில பணி யாளர்கள் போர்க்கொடி தூக்கி யுள்ளனர். 'காக்னிஸன்ட்' நிறு வனம் 6,000 பணியாளர்களை நீக் கத் திட்டமிடுகிறது. இன்போசிஸ் நிறுவனம் 1000 பேரை நீக்க உத்தரவிட்டுள்ளது. புதியவர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர் என்று ஐடி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!