மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்துகள் பற்றி யும் அவர் எழுதி வைத்துள்ளதாக நம்பப்படும் உயில் பற்றியும் இரு வெவ்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. ஜெயலலிதாவின் அத்தனை சொத்துகளும் தமக்கும் தமது சகோதரி தீபாவுக்கும்தான் சொந் தம் என்று ஜெயலலிதா அண்ணன் மகன் தீபக் ஜெயராம் தெரி வித்துள்ளார். "24,000 சதுர அடி கொண்ட போயஸ் தோட்ட பங்களா வீடு, சென்னை பார்சன் வளாகத்தில் உள்ள இரு கட்டடங்கள், மந்தை வெளி செயின்ட் மேரிஸ் சாலை யில் 1206 சதுர அடியிலுள்ள ஜெயலலிதா வீடு, கொடநாடு எஸ்டேட், ஹைதராபாத் ஸ்ரீநகர் குடியிருப்பில் 14,000 சதுர அடியி லுள்ள திராட்சைத் தோட்டம் உள்ளிட்ட எட்டு சொத்துகள் எங் கள் இருவருக்குமே சொந்தம். "என் அத்தை ஜெயலலிதா எழுதிய உயில் தற்போது என்னிடம்தான் உள்ளது.
அந்த உயி லில் அனைத்து சொத்துகளும் என் பெயரிலும் என் சகோதரி தீபா பெயரிலும் எழுதப்பட்டுள் ளன," என்று ஆங்கில தொலைக் காட்சி ஒன்றிடம் தீபக் தெரிவித் திருப்பது அரசியல் வட்டாரத் திலும் தமிழக மக்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜெயலலிதா மரணத்தைத் தொடர்ந்து பல்வேறு மர்மங்கள் நிகழ்ந்து வரும் சூழலில் தீபக் எதற்காக இப்படி ஒரு தகவலைத் தெரிவித்திருக்கிறார் என்பதும் மர்மமாக உள்ளது. இதற்கிடையே, ஜெயலலிதா சொத்துகள் தொடர்பாக கொட நாடு கொலை, கொள்ளைச் சம்ப வங்கள் தொடர்பாக கைது செய் யப்பட்ட இருவர் வேறுமாதிரி வாக்குமூலம் அளித்துள்ளனர்.