எச்ஐவி கிருமி பரவுவதாக வதந்தி; காவல்துறை கடும் எச்சரிக்கை

சென்னை: பொதுமக்களை அச்சுதுறுத்தும் வகையில் பரவும் எச்ஐவி கிருமி பரவல் குறித்த வதந்தியை நம்பவேண்டாம் என காவல்துறை கேட்டுக்கொண்டுள் ளது. எச்ஐவி கிருமி பரவி வரு வதாகத் தகவல் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலிசார் எச்சரித் துள்ளனர். அண்மைய சில தினங்களாக ஊசி மூலம் மர்ம மனிதர்கள் சிலர் எச்ஐவி கிருமியைப் பரப்பு வதாக தமிழகம் முழுவதும் தக வல் பரவி உள்ளது. அந்த மர்ம மனிதர்கள் ஐஎஸ் பயங்ரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என் றும் கூறப்படுகிறது. "இலவசமாக நீரிழிவு பரிசோ தனை செய்வதாகக் கூறி, சில இளையர்கள் வீடு தேடி வருகி றார்கள். பரிசோதனைக்கு ரத்தம் எடுப்பதாகக் கூறி, ஊசி மூலம் எச்ஐவி கிருமியைச் செலுத்து கிறார்கள். "இதனால் அப்பாவிகள் பலர் எந்தத் தவறும் செய்யாமல் எச்ஐவி கிருமித் தொற்றுக்கு ஆளாகிறார்கள்," என்று சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!