சுவர் இடிந்து 26 பேர் பலி திருமண மண்டபத்தின் சுவர்

இடிந்து விழுந்து 26 பேர் மாண்ட சம்பவம் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் நிகழ்ந்தது. பாரத்பூர் மாவட்டத்தில் உள்ள அன்னபூர்ணா திருமண மண்ட பத்தில் நேற்று முன்தினம் இரவு நிகழ்ந்த அந்த சோக சம்பவத்தில் மேலும் பலர் காயமடைந்தனர். "புழுதிப் புயல் காரணமாக மண்டபத்தின் சுவர் இடிந்து விழுந்தது. இதனால், புழுதிப் புயலில் இருந்து தப்புவதற்காக சுவரை ஒட்டி நின்றிருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண் டனர். சம்பவம் குறித்து உள்ளூர் வாசிகள் அளித்த தகவலை அடுத்து மீட்புப் படையினர் உட னடியாக அங்கு விரைந்து சென் றனர்," என்று தலைமை போலிஸ் ஆய்வாளர் அலோக் வ‌ஷிஷ்த் சொன்னதாக 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' செய்தி கூறியது. "11 ஆண்கள், எட்டுப் பெண் கள், நான்கு குழந்தைகள் என சம்பவ இடத்திலேயே 23 பேர் உயிரிழந்தனர். மேலும் 28 பேர் காயமடைந்தனர். கடுமையான புழுதிப் புயலால் மின்சாரமும் தடைபட்டுள்ளது," என்றும் திரு அலோக் தெரிவித்தார்.

துக்க நிகழ்வாக மாறிய கொண்டாட்டம்... சொந்தங்கள் கூடி புதிய பந்தத்தை உருவாக்கும் மகிழ்ச்சி கரமான திருமண விழா, இருக்கும் உறவுகளையும் இழந்து தவிக்க நேரிடும்படியாக மாறிப்போனது. உயிரிழப்புகளை ஏற்படுத்திய விபத்துக்குப்பின் சம்பவ இடத்தை ஆராயும் போலிசார். படம்: ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!