'பாஜகவின் பினாமி அரசாக செயல்படுகிறது தமிழக அரசு'

சென்னை: தமிழக அரசு தற்போது பாரதிய ஜனதாவின் பினாமி அரசாக செயல்படுகிறது என தமிழக காங்கிரஸ் தலைவர், திருநாவுக்கரசர் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவை பிரித்து ஆட்சி செய்த பாரதிய ஜனதா தற்போது, அக்கட்சியுடன் இணைந்து ஆட்சி செய்ய பார்ப்பதாகக் குற்றம்சாட்டினார். "தமிழகத்தில், யாரிடம் ஆட்சி, அதிகாரம் உள்ளது என தெரியவில்லை. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் காலங்களில் நடைபெறாத ஒரு சம்பவம், தற்போது சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்துள்ளது. "அங்கு, மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தலைமை யில் ஆய்வுக் கூட்டம் நடந்தது வேடிக்கையாக உள்ளது. தமிழ கத்தை, அதிமுக ஆட்சி செய்கிறதா அல்லது பாஜக ஆட்சி செய்கிறதா எனத் தெரியவில்லை," என்றார் திருநாவுக்கரசர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!