புகைபிடிப்போர் எண்ணிக்கை குறைந்தது

சென்னை: தமிழகத்தில் புகை பிடிப்போரின் எண்ணிக்கை குறைந்து வருவதாக அண்மைய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின் றன. சிகரெட் உறைகளில் (பாக்கெட்) புகைபிடிப்போரை எச்சரிக்கும் வகையில் இடம்பெறும் படங்களே இதற்குக் காரணம் எனக் கூறப் படுகிறது. "சிகரெட் உறைகளில் இத்த கைய படங்கள் இடம்பெற வேண் டும் எனும் சட்டம் ஏற்கெனவே தமிழகத்தில் தீவிரமாக அமல்படுத் தப்பட்டுள்ளது. எனினும் எச்சரிக்கை படங்களின் அளவு பெரிதாகியதால் ஓரளவு பலன் கிடைத்துள்ளது," என்கிறார் தமி ழக பொது சுகாதாரத் துறையின் இயக்குநர் குழந்தைசாமி.

தற்போது ஒவ்வொரு சிகரெட் உறையிலும் எண்பது விழுக்காடு பகுதியை, புகைபிடிப்பதால் ஏற் படக்கூடிய பாதிப்புகளை எடுத்துக் காட்டும் படங்கள் ஆக்கிரமித் துள்ளன. இது புகைபிடிப்போர் மத்தியில் கூடுதல் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. "மெதுவாக, அதே சமயம் சீரான வகையில் புகைபிடிப்போர் எண்ணிக்கை தமிழகத்தில் குறைந்து வருகிறது. கடந்த பத்து ஆண்டுகளில் நாடு முழுவதிலும் தமிழகம் உள்ளிட்ட இரு மாநிலங் களில் மட்டுமே புகை பிடிப்போர் எண்ணிக்கை பத்து விழுக்காடு அளவு குறைந்துள்ளது. "எச்சரிக்கை படங்கள் மட்டுமே இந்த எண்ணிக்கையை வெகு வாகக் குறைத்துவிடாது. மாறாக, பள்ளிப் பருவத்திலேயே புகை பிடிப்பதால் ஏற்படக்கூடிய பல்வேறு தீங்குகள் குறித்து புரிய வைக்க வேண்டும்," என்கிறார் குழந்தைசாமி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!