மயிலாடுதுறை: ராஜஸ்தான் மாநிலம் கரோலி மாவட்டத்தில் சென்ற ஆண்டு ஓடும் ரயிலில் இளம்பெண் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டார். இது தொடர்பாக ராஜஸ்தான் ரயில்வே ஊழியர் ராம்ராஜ் மீனா, 30, என்பவரை போலிஸ் தேடிவந்தது. அவர் நாகை மாவட்டம், மயிலாடுதுறை பகுதியில் பதுங்கி இருப்பதாக ராஜஸ்தான் மாநில சிறையில் நளினி உண்ணாவிரதம் போலிசுக்கு ரகசிய தகவல் கிடைக்க, அவர்கள் தமிழ்நாட்டு போலிஸ் உதவியை நாடினர். மயிலாடுதுறை ரயிலடி பகுதியில் ராம் ராஜ்மீனா தங்கி இருப்பதாகத் தகவல் கிடைத்ததையடுத்து தனிப்படை போலிஸ் மாறுவேடத்தில் சென்று ராம்ராஜ் மீனாவை கைது செய்து ராஜஸ்தான் போலிசாரிடம் ஒப்படைத்தது.
ராஜஸ்தான் ரயில்வே ஊழியர் ராம்ராஜ் மீனா. படம்: தமிழக ஊடகம்