சென்னை: தமிழகத்தில் மதுக் கடை களை மூட வலியுறுத்திப் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், கடந்த ஆண்டைக் காட்டி லும் நடப்பாண்டில் மது விற்பனை மூலம் தமிழக அரசுக்கு கூடுதலாக ரூ.1,149 கோடி வருவாய் கிடைத்துள் ளது. அரசு வெளியிட்ட கொள்கை விளக்கக் குறிப்பில் இத்தகவல் இடம்பெற்றுள்ளது. தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட வேண் டும் என உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இதன் எதிரொலியாக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுக் கடைகள் மூடப்பட்டன,
இதன் காரணமாக மது விற்பனை மூலம் கிடைக்கும் வருவாய் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு நேர்மாறாக கடந்த ஆண்டை விட தற்போது ரூ.1,149 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது. கடந்த 2015-=2016ஆம் ஆண்டு ஆயத்தீர்வை வருவாய் (மதிப்பு கூட்டு வரியும் சேர்த்து) ரூ.25,845.58 கோடி யாக இருந்தது. 2016-=2017 (மே மாதம் வரை) ரூ.26,995.25 கோடியாக உயர்ந்தது. அதாவது, ஒரே ஆண்டில் 1,149.67 கோடி ரூபாய் வருவாய் அதிகரித்து இருக்கிறது. இத்தகவல் தமிழக அரசு வெளி யிட்ட கொள்கை விளக்க அறிக் கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.