மதுக் கடைகள் குறைந்தாலும் வருவாய் குறையவில்லை

சென்னை: தமிழகத்தில் மதுக் கடை களை மூட வலியுறுத்திப் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், கடந்த ஆண்டைக் காட்டி லும் நடப்பாண்டில் மது விற்பனை மூலம் தமிழக அரசுக்கு கூடுதலாக ரூ.1,149 கோடி வருவாய் கிடைத்துள் ளது. அரசு வெளியிட்ட கொள்கை விளக்கக் குறிப்பில் இத்தகவல் இடம்பெற்றுள்ளது. தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட வேண் டும் என உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இதன் எதிரொலியாக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுக் கடைகள் மூடப்பட்டன,

இதன் காரணமாக மது விற்பனை மூலம் கிடைக்கும் வருவாய் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு நேர்மாறாக கடந்த ஆண்டை விட தற்போது ரூ.1,149 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது. கடந்த 2015-=2016ஆம் ஆண்டு ஆயத்தீர்வை வருவாய் (மதிப்பு கூட்டு வரியும் சேர்த்து) ரூ.25,845.58 கோடி யாக இருந்தது. 2016-=2017 (மே மாதம் வரை) ரூ.26,995.25 கோடியாக உயர்ந்தது. அதாவது, ஒரே ஆண்டில் 1,149.67 கோடி ரூபாய் வருவாய் அதிகரித்து இருக்கிறது. இத்தகவல் தமிழக அரசு வெளி யிட்ட கொள்கை விளக்க அறிக் கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!