மோடி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்குப் பாதிப்பு

லக்னோ: மூன்றாவது அனைத் துலக யோகா தினத்தை முன் னிட்டு உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் ராமாபாய் அம்பேத்கர் திடலில் நடைபெற்ற பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி யோகாசனப் பயிற்சியில் ஈடுபட் டார். அப்போது அவர் பேசுகையில், "நமது மொழி, கலாசாரம் பற்றி பல்வேறு நாடுகள் தெரிந்திருக்க வில்லை. ஆனால் இந்தியாவுக்கு வெளியே யோகா புகழ் பெற்றுள் ளது. இந்தியாவை உலகத்துடன் இணைத்துள்ளதில் யோகா பெரும் பங்காற்றுகிறது," என்றார். அவருடன் மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தும் அமைச்சர் களும் யோகா பயிற்சியில் ஈடு பட்டனர்.

சுமார் 51,000 பேர் பங்கேற்ற இந்நிகழ்ச்சியின்போது லேசான மழை குறுக்கிட்டபோதும் அதை பொருட்படுத்தாத பிரதமர் மோடி நனைந்தவாறே தொடர்ந்து யோகாசனத்தில் ஈடுபட்டார். மாணவ, மாணவியரும் மழை யில் நனைந்தவாறே யோகாசனம் செய்தனர். இந்நிகழ்ச்சிக்காக ஏராளமான மாணவர்கள் அதிகாலை 4 மணிக்கே திடலுக்கு வரவழைக் கப்பட்டிருந்தனர். அதனால் அவர்கள் களைப்பாக இருந்த தோடு மழையிலும் நனைந்ததால் 70 மாணவர்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் லோக் பந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர் களுக்கு மருந்து மற்றும் ஊசி போடப்பட்டது. இதில் 22 பேர் மருத்துவ மனையில் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். மழை யில் நனைந்ததால் மாணவி களுக்கு காய்ச்சல் மற்றும் இருமல் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மழையில் நனைந்தவாறு யோகாசனம் செய்த மோடி. படம்: ஊடகம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!