சென்னை: பிரபல கூகல் நிறுவனத்தின் மையம் ஒன்றைத் தமிழகத்தில் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. புதிய மையம் அமைப்பது தொடர்பில் கூகல் நிறுவனத் தின் தலைமைச் செயல் இயக் குநர் சுந்தர் பிச்சையுடன் பேச்சு வார்த்தை நடத்தப்படும் என தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள் ளார். நேற்று முன்தினம் சட்டப் பேரவையில் தொழில்துறை மாநியக் கோரிக்கை நடவடிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய திமுக உறுப்பினர் ஐ.பெரியசாமி அண்மையில் சுந்தர் பிச்சை தமிழகம் வந்திருந்தபோது அரசுத் தரப்பில் அவருக்கு ஏன் வரவேற்பு அளிக்கவில்லை எனக் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த நிதியமைச்சர் ஜெயகுமார், சுந்தர் பிச்சை தன் தாய் நாட்டுக்கு வருகை மேற்கொண்டதாகவும் தமிழகத்துக்கு எனத் திட்டம் ஏதேனும் அறிவித்திருந்தால் அவருக்கு வரவேற்பு அளிக்கப் பட்டிருக்கும் என்றும் கூறினார். இதையடுத்து பேசிய அமைச் சர் மணிகண்டன், மிக விரைவில் அமெரிக்கா அல்லது சிங்கப்பூரில் சுந்தர் பிச்சையைச் சந்திக்க இருப்பதாகவும் அச் சமயம் தமிழகத்தில் மதுரை அல்லது தென்பகுதியில் கூகல் நிறுவனத்தின் மையத்தை அமைப்பது குறித்து பேசப்படும் என விளக்கம் அளித்தார். அமைச்சர் அளித்த இந்த விளக்கத்தை அடுத்து தமிழகத் தில் கூகுள் மையம் அமைப்பது தொடர்பான விவாதம் முடிவுக்கு வந்தது.