பயங்கரவாதத்தை வேரறுக்க இந்தியா =அமெரிக்கா உறுதி

பயங்கரவாதத்திற்கு எதிராக இணைந்து போரிட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் அமெ ரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் உறுதி பூண்டுள்ளனர். இரண்டு நாள் பயணமாக அமெரிக்கா சென்றிருந்த இந்தியப் பிரதமர் மோடி வா‌ஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் டிரம்ப்பைச் சந்தித்துப் பேசினார். அப்போது இரு நாடுகளுக்கு இடையில் வர்த்தகத் தொடர்பு, பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகிய வற்றை அதிகரிப்பது குறித்து அவர்கள் கலந்துரையாடினர்.

அதன்பின் அவ்விருவரும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது 'இந்தியா வும் அமெரிக்காவும் உண்மையான நண்பர்கள்' என்று கூறிய டிரம்ப், தானும் மோடியும் சமூக ஊடகங் களில் கோலோச்சும் தலைவர்கள் என்றும் குறிப்பிட்டார். அத்துடன், பாகிஸ்தானுக்கும் அவ்விரு தலைவர்களும் எச்சரிக்கை விடுத்தனர். மற்ற நாடுகள் மீது பயங்கரவாதத் தாக்குதல் தொடுக்க தன் நாட்டை ஒரு தளமாகப் பயன்படுத்திக்கொள்ள பாகிஸ்தான் அனுமதிக்கக்கூடாது என்று அவர்கள் வலியுறுத்தினர். மேலும், 2008 மும்பை தாக் குதல், பதான்கோட் விமானப்படைத் தளம் மீதான தாக்குதல் ஆகிய வற்றில் தொடர்புடையவர்களை பாகிஸ்தான் நீதியின்முன் நிறுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

வெள்ளை மாளிகையைவிட்டுப் புறப்பட்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை ஆரத் தழுவி விடைகொடுத்தனுப்பும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப். படம்: ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!