விமான நிலையத்தில் பேரிடர் மேலாண்மை ஒத்திகை

கோவை: பேரிடர் சமயங்களில் எவ்வாறு துரித கதியில் செயல்பட வேண்டும் என்பது தொடர்பிலான ஒத்திகை ஒன்று நேற்று முன்தினம் கோவை விமான நிலையத்தில் நடத்தப் பட்டது. இதில் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பேரிடர் மேலாண்மை தொடர் பாக பல்வேறு துறையினருக்கும் தொடர் பயிற்சிகள் அளிக்கப் பட்டு வருகின்றன. இந்நிலையில் மாநில அரசின் ஒத்துழைப்புடன் கோவை விமான நிலையத்தில் பேரிடர் மேலாண்மை ஒத்திகை நடைபெற்றது. இந்திய விமானப் போக்கு வரத்து ஆணையத்தின் விதி முறைகளுக்கு ஏற்ப நாடு முழுவதிலும் உள்ள விமான நிலையங்களில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இத்தகைய ஒத்திகை நடைபெற வேண்டியது அவசியம். அந்த வகையில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஒத்தி கையில் விமான நிலைய ஊழியர்கள், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை, 108 ஆம்புலன்ஸ் சேவைப் பிரிவு ஆகியவற்றின் ஊழியர்கள் என 200க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.

கோவை விமான நிலையத்தில் பேரிடர் மேலாண்மை தொடர்பான ஒத்திகை நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஒத்திகையின் போது காயமடைந்ததாக கருதப்பட்டவர்கள் கீழே படுத்துக் கிடக்கும் காட்சி இது. படம்: தகவல் ஊடகம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!