பிரதமர் குறித்து அவதூறு பரப்பியதாக மாணவர் கைது

கோவை: பிரதமர் குறித்து அவதூறு பரப்பிய குற்றச் சாட்டின் பேரில் கல்லூரி மாணவர் ஒருவரை கோவை போலிசார் கைது செய்துள்ளனர். 22 வயதான வினோத் என்ற அம்மாணவர் கோவை, சட்டக்கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வருகிறார். புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி என்ற அமைப்பின் மாவட்ட அமைப்பாளராக உள்ள இவர், இரு தினங்களுக்கு முன்னர் கோவை அரசு கலை கல்லூரி முன், 'புதிய மன்னவன்' என்ற புத்தகத்தை விற்றுக் கொண்டிருந்தார். அப்புத்தகத்தில் பிரதமர் மோடியையும், மத்திய அரசையும் மிகக் கடுமையாக விமர்சிக்கும் செய்தி இடம் பெற்றிருந்ததாகக் கூறப் படுகிறது.

மேலும் பிரதமர் குறித்து அவதூறு பரப்பும் கருத்துக்கள் இருந்ததாக வும் புகார் எழுந்தது. இது தொடர்பாக உள்ளூர் பாஜகவினர் போலிசில் புகார் அளித்தனர். இதையடுத்து மாணவர் வினோத் கைது செய்யப்பட்டார். அவதூறு கருத்துக்களைப் பரப்புதல் என்ற பிரிவின் கீழ், அவர் மீது வழக்குப் பதிவாகியுள்ளது. இதையடுத்து கோவை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட வினோத், பின்னர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீதான நடவடிக்கை மாணவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!