கதிராமங்கலம் குழாயில் உடைப்பில்லை; மாவட்ட ஆட்சியர் திட்டவட்டம்

கும்பகோணம்: கதிராமங்கலம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள எண்ணெய்க் குழாயில் உடைப்பு ஏதும் இல்லை என தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார். எனினும் அப்பகுதியில் குடிநீரில் மாசு கலந்து வருவது குறித்து ஆய்வு நடத்தப்படும் என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார். இதற்கிடையே கதிராமங்கலத்தில் உள்ள ஓஎன்ஜிசி குழாயில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் வெளியேறுவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுவதாகவும் அச்செய்தி தெரிவிக்கிறது.

எண்ணெய்க் குழாய்களை நிரந்தரமாக அகற்றக் கோரி கதிராமங்க லத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வகையான போராட்டங்கள் நீடித்து வருகின்றன. போராட்டம் நடத்தியபோது கைதான 9 பேரையும் விடுவித்தால்தான் அரசுத் தரப்புடன் பேச்சு வார்த்தை நடத்துவோம் என கதிராமங்கலம் பகுதி மக்கள் திட்டவட்டமாகக் கூறியுள்ளனர். இதனால் பேச்சுவார்த்தை நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!