நீதிமன்ற அவமதிப்பு: முன்னாள் தேர்தல் ஆணையருக்கு அழைப்பாணை

சென்னை: உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் முன்னாள் தேர்தல் ஆணையர் சீதாராமன் நேரில் முன்னிலையாகுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த மே மாதத்துக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்காதது தொடர்பில் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நேரில் முன்னிலையாகுமாறு முன்னாள் தேர்தல் ஆணையர் சீதாராமனுக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால் அவர் நீதிமன்றம் வரவில்லை. இதனால் திமுக சார்பில் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுக்கப்பட்டது. இதில் நான்கு வாரங்களுக்குள் உயர் நீதிமன்றத்தில் முன்னிலையாகி பதில் அளிக்க முன்னாள் தேர்தல் ஆணையருக்கும் சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் உட்பட ஆறு பேருக்கு நீதிமன்ற அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!