ஹைதராபாத்: தேநீர் தயாரிப்பதற் காக ரயிலின் கழிவறையில் உப யோகப்படுத்தப்படும் நீரைப் பயன் படுத்திய ஒப்பந்ததாரருக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக் கப்பட்டுள்ளது. ரயிலில் உள்ள கழிவறையில் இருந்து தேநீர்ச் சட்டியை எடுத்துச் செல்வது போன்ற காணொளிப் பதிவு கடந்த ஒரு வார காலமாக சமூக வலை தளங் களில் வேகமாக பரவியது. சார்மினார் விரைவு ரயிலில், தெலுங்கானா மாநிலம் செக்ந் தராபாத் ரயில் நிலையத்தில் கடந்தாண்டு டிசம்பரில் இச்சம்ப வம் நடந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்துத் தென்னக ரயில்வே துறையினர் நடத்திய விசாரணையில், அவர்களில் ஒருவர் ரயில்வே ஒப்பந்ததாரர் பி.சிவபிரசாத்தின் ஊழியர் என்பது தெரியவந்தது. ரயிலின் கழிவறையில் உள்ள குழாயில் இருந்த தண்ணீர் நிரப்பப் படவில்லை எனவும் அந்தக் கேன்களில் மீதமிருந்த டீயை ஒரு கேனுக்கு மாற்றியதாகவும் ரயிலில் உள்ள கூட்ட நெரிசலைத் தவிர்க் கவே அதுபோன்று செய்ததாகவும் அந்த செயலுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிலையில், இதுபோன்ற தவறான செயல்கள் மிகவும் கண் டிக்கத்தக்கவை என்று ரயில்வேத் துறை தெரிவித்துள்ளது.