சென்னை: ஜனநாயகக் கடமை ஆற்ற மீண்டும் சட்டப்பேரவைக்கு திரும்பியுள்ள திமுக உறுப்பினர் களை வரவேற்பதாக அமைச்சர் ஜெயக்குமார் (படம்) கூறியுள்ளார். நேற்று பேரவையில் பேசிய அவர், முறுக்கிவிட்டுப் போன மாப்பிள்ளைகள் மீண்டும் வந்துள் ளதாக திமுக எம்எல்ஏக்களைக் கிண்டலும் செய்தார். இரண்டு நாட்கள் விடு முறைக்குப் பிறகு தமிழகச் சட்டப் பேரவை நேற்று காலை மீண்டும் கூடியது. அப்போது நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
இதில் திமுகவினரும் பங்கேற் றனர். முன்னதாக அக்கட்சி எம்எல்ஏக்கள் தொடர்ந்து நான்கு நாட்களுக்குப் பேரவை நடவடிக் கைகளைப் புறக்கணித்தனர்.