காற்றில் மிதக்கும் பலூன் மூலம் கிராமங்களுக்கு இணைய வசதி

டேராடூன்: காற்றில் பறக்கும் பலூன்கள் மூலம் இந்தியாவின் தொலைதூர கிராமங்கள், மலைப் பிரதேசங்களுக்கு கைத்தொலை பேசி இணையச் சேவை வழங்கு வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கைத்தொலைபேசி கோபுரங் களுக்கு மாற்றாக மும்பை ஐஐடி கல்வி நிறுவனம் காற்றில் பறக் கும் பலூன் மூலம் கைத்தொலை பேசி-இணைய இணைப்புப் பெறும் வசதியைக் கண்டுபிடித்து உள்ளது. 50 லட்ச ரூபாய் செலவில் 'ஏரோஸ் டாட் டெக்னாலஜி' முறையில் இது உருவாக்கப்பட்டு உள்ளது. 6 மீட்டர் நீளம் கொண்ட பலூ னில் நைட்ரஜன் வாயு நிரப்பப்பட்டு இருக்கும். அதில் 'டிரான்ஸ்ரிசீவர் ஆன்டனா' கருவி பொருத்தப் பட்டு இருக்கும். இதன்மூலம் 7.5 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு வைஃபை இணைப்பு கிடைக்கும். இந்தியாவின் முதலாவது 'ஏர்பலூன்' இணையச் சேவை வசதியை உத்தரகாண்ட் மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தொடங்கி வைத்தார்.

மேலும் செய்திகள்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!