சென்னையில் 2வது விமான நிலையம்: தீவிர பரிசீலனை

சென்னை: விமானப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிக ரித்து வரும் நிலையில் சென்னை அருகே இரண்டாவது விமான நிலையம் அமைப்பது குறித்து மத்திய அரசு தீவிரமாகப் பரி சீலித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மதுராந்தகம் அருகே புதிய விமான நிலையத்தை அமைப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாகவும் அத்தகவல் தெரிவிக்கிறது. நாட்டில் உள்ள முக்கிய விமான நிலையங்களில் ஒன்றாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் விளங்குகிறது. எனினும் பயணிகளின் எண்ணிக்கை அதி கரித்த நிலையில், இங்கு கூடுதல் வசதிகளை ஏற்படுத்தித் தர இயலவில்லை.

இடநெருக்கடி காரணமாக விமான நிலையத்தை விரிவுபடுத் தும் பணியையும் மேற்கொள்ள இயலவில்லை. இதையடுத்து மீனம்பாக்கம் விமான நிலையத்தை உள்நாட்டு விமானப் போக்குவரத் துக்காக ஒதுக்கிவிட்டு, புதிய அனைத்துலக விமான நிலையம் அமைப்பதே சிறந்த ஏற்பாடாக இருக்கும் எனும் முடிவுக்கு மத்திய அரசு வந்திருப்பதாகத் தெரிகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீபெரும்புதூர், கும்மிடிப்பூண்டி பகுதிகளில் இரண்டாவது விமான நிலையம் அமைப்பது குறித்துத் தீவிரமாகப் பரிசீலிக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் அம்முயற்சி கைவிடப்பட்டது.

மேலும் செய்திகள்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!