நீதிபதி: சிறப்புக்குரிய மெரினா கடற்கரையில் ஜெயலலிதா நினைவிடம் கூடாது

சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட மறைந்த முன்னாள் முதல் வர் ஜெயலலிதாவிற்கு அரசாங்கச் செலவில் மெரினாவில் நினைவிடம் கட்டக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி உள்ளிட்ட பலர் வழக்குத் தொடர்ந்தனர். கடற்கரை ஒழுங்குமுறை மண்டல விதி முறைகளை மீறி மெரினா கடற்கரையில் எந்தக் கட்டடமும் கட்ட அனுமதிக்கக்கூடாது என்றும் அவர்கள் தங்களது மனுவில் கூறி யிருந்தனர். தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது குறிப்பிட்ட தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, "உலகிலேயே இரண்டாவது மிக நீளமான கடற்கரையாக விளங்குவது மெரினா கடற்கரை. "இது தமிழகத்திற்கு மட்டுமின்றி இந் தியாவிற்கே பெருமையான ஒன்று. சாலையில் செல்லும் மக்கள் எந்தவொரு இடையூறுமின்றி கடற்கரையின் அழகைக் கண்டு ரசிக்க வேண்டும். "சிறப்பு வாய்ந்த மெரினா கடற்கரையில் விதிமுறைகளுக்குப் புறம்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் உள்பட எந்தவொரு கட்டடமும் கட்டப்படக்கூடாது என்பதுதான் என்னுடைய தனிப்பட்ட விருப் பம். "இருப்பினும் இந்த வழக்கின் இருதரப்பு வாதங்களின் அடிப்படையில்தான் இறுதி முடிவுக்கு வரமுடியும்," என்று கூறினார். அடுத்தகட்ட விசாரணையை வரும் 25ஆம் தேதிக்கு அமர்வு ஒத்திவைத்தது.

மேலும் செய்திகள்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!