இமாச்சலப் பிரதேச கனமழை

சிம்லா: இமாலச்சலபிரதேசம், உத்தரகாண்ட்டில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக மாநில மெங்கும் வெள்ளக்காடாக காட்சி யளிக்கிறது. இமாச்சலப் பிரதேசத் தில் மட்டும் மழை, நிலச்சரிவில் புதையுண்டு ஒன்பது பேர் உயி ரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள் ளது. "இம்மாசலப் பிரதேசத்தில் பெய்து வரும் கனமழையில் சிக்கி ஒன்பது பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் அவதிப் பட்டு வருகின்றனர். மின் இணைப் பும் துண்டிக்கப்பட்டுள்ளது. சிம்லா நெடுஞ்சாலையையும் நிலச்சரிவு மூடியுள்ளது," என்று அதிகாரிகள் கூறினர். மாண்டி மாவட்ட நிலச்சரிவு சம்பவங்களில் மூவர் உயிரிழந்த னர். சோலான் மாவட்டத்தில் உள்ள கௌசல்யா ஆற்றின் வெள்ளப் பெருக்கில் ஒரு சிறுவன் அடித்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்படு கிறது.

இமாச்சலப்பிரதேச மாநிலம், சோலான் மாவட்டத்தில் உள்ள காந்தாகாட்டின் சால்க்கா கிராமப் பகுதியில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் ஒன்பது பேர் உயிருடன் புதையுண்டனர். இதில் ஒருவரது உடல் மீட்கப் பட்டது. மற்றவர்களை மீட்கும் பணி தொடர்ந்து வருகிறது.

வட இந்தியாவில் உள்ள ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஓடும் டாவி ஆற்றில் கனமழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த வெள்ளத்தில் மிதந்து வந்த ஒரு மரத்தை சமையலின்போது அடுப்பு எரிப்பதற் காகப் பயன்படுத்த குதிரை வண்டியில் ஏற்றிக்கொண்டு செல்கிறார். தொடர்ந்து இங்கு கனமழை பெய்து வருகிறது. மண்சரிவும் ஏற்பட்டுள்ளது. படம்: இபிஏ

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!