ஹெலிகாப்டர் ஊழல்: அகமது பட்டேல் பெயர் வெளிவந்தது

புதுடெல்லி: அகஸ்டாவெஸ்ட் லாந்து 'விவிஐபி' ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் கைது செய்யப் பட்டிருக்கும் கிறிஸ்டியன் மைக்கல், அமலாக்கப் பிரிவின் குற்றப் பதிவேட்டில் குறிப்பிடப் பட்டிருக்கும் 'ஏபி' என்ற நபரை அகமது பட்டேல் என்று புதுடெல்லி நீதிமன்றத்தில் அடையாளம் காட்டி உள்ளதாகக் கூறப்படு கிறது.
மைக்கல் கூறும் அகமது பட்டேல் யார் என்று தெளிவாக தெரியவில்லை என்றபோதிலும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரைத்தான் அவர் குறிப் பிடுகிறார் என்று கூறப்படுகிறது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மற்றொரு நபரான ராஜிவ் சக்சேனாவும் குற்றப் பதிவேட்டில் குறிப்பிடப்பட்டு இருக்கும் 'ஏபி'யை அகமது பட்டேல் என்று அடையாளம் காட்டியிருப்பதாக அமலாக்கப் பிரிவு தெரிவித்தது.
தாம் தவறு ஏதும் செய்ய வில்லை என்று காங்கிரஸ் தலைவர் அகமது பட்டேல் முன்பு தெரிவித்திருந்தார்.
ஹெலிகாப்டர்களை வாங்கும் போது தற்காப்பு அதிகாரிகள், அரசாங்க அதிகாரிகள், அரசியல் வாதிகள், ஆகியோருக்கு 30 மில்லியன் யூரோ லஞ்சம் கொடுக்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதுதொடர் பாக வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!