மோடி: தாமரை மலர்ந்தே தீரும்

கந்தர்கார்க்: ஒடிசா மாநிலத்தில் பழங்குடியினர் வசிக்கும் கந்தர் கார்க் பகுதியில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் நேற்று பேசிய பிரதமர் மோடி, "ஒடி சாவில் தாமரை மலர்ந்தே தீரும், இம்முறை ஒடிசா மாநிலத்தில் அதிக வாக்கு வித்தியாசத்தில் தாமரை மலரும்," என்றார்.

"இதேபோல் மத்தியிலும் மீண்டும் பாஜக ஆட்சி இடம்பெறும் என்பதில் சந்தேகம் இல்லை. பாஜக நாட்டின் வலிமையான, தீர்க்கமான கட்சியாகும். நாட்டின் வளர்ச்சி, பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு பாஜக செயல்படுகிறது. "நாட்டிற்கும், ஒடிசா விற்கும் வரப்போகும் பாராளுமன்ற தேர்தல் நல்ல எதிர்காலத்தை உரு வாக்கப்போகிறது. தொண்டர் களின் கடுமையான உழைப்பிலும் வியர்வையிலும் உருவானதுதான் இந்த பாஜகவே தவிர பணத்தினா லோ அல்லது வாரிசு முறையிலோ உருவாக்கப்படவில்லை. எனவே இன்று நாட்டில், மிகப்பெரிய ஜன நாயக கட்சியாக பாஜக விளங்கு கிறது," என்று திரு மோடி குறிப்பிட்டார்.

இதற்கிடையே நேஷனல் டிரஸ்ட் நடத்திய கருத்துக் கணிப்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு நாடு முழுவதும் செல்வாக்கு அதி கரித்து இருப்பது தெரிய வந்துள்ளது. யார் பிரதமராக வர வேண்டும் என்ற கேள்விக்கு சுமார் 63 சதவீதம் பேர் மோடியே மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இந்த நிலையில் பாஜகவின் 39வது ஆண்டுவிழா நேற்று கோலாகல மாகக் கொண்டாடப்பட்டது. இதை யொட்டி டுவிட்டரில் பதிவிட்ட திரு மோடி, இந்தியா விரும்பும் கட்சியாக பாஜக உருவாகியுள்ளது என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!