கந்தர்கார்க்: ஒடிசா மாநிலத்தில் பழங்குடியினர் வசிக்கும் கந்தர் கார்க் பகுதியில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் நேற்று பேசிய பிரதமர் மோடி, "ஒடி சாவில் தாமரை மலர்ந்தே தீரும், இம்முறை ஒடிசா மாநிலத்தில் அதிக வாக்கு வித்தியாசத்தில் தாமரை மலரும்," என்றார்.
"இதேபோல் மத்தியிலும் மீண்டும் பாஜக ஆட்சி இடம்பெறும் என்பதில் சந்தேகம் இல்லை. பாஜக நாட்டின் வலிமையான, தீர்க்கமான கட்சியாகும். நாட்டின் வளர்ச்சி, பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு பாஜக செயல்படுகிறது. "நாட்டிற்கும், ஒடிசா விற்கும் வரப்போகும் பாராளுமன்ற தேர்தல் நல்ல எதிர்காலத்தை உரு வாக்கப்போகிறது. தொண்டர் களின் கடுமையான உழைப்பிலும் வியர்வையிலும் உருவானதுதான் இந்த பாஜகவே தவிர பணத்தினா லோ அல்லது வாரிசு முறையிலோ உருவாக்கப்படவில்லை. எனவே இன்று நாட்டில், மிகப்பெரிய ஜன நாயக கட்சியாக பாஜக விளங்கு கிறது," என்று திரு மோடி குறிப்பிட்டார்.
இதற்கிடையே நேஷனல் டிரஸ்ட் நடத்திய கருத்துக் கணிப்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு நாடு முழுவதும் செல்வாக்கு அதி கரித்து இருப்பது தெரிய வந்துள்ளது. யார் பிரதமராக வர வேண்டும் என்ற கேள்விக்கு சுமார் 63 சதவீதம் பேர் மோடியே மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்று கூறியுள்ளனர்.
இந்த நிலையில் பாஜகவின் 39வது ஆண்டுவிழா நேற்று கோலாகல மாகக் கொண்டாடப்பட்டது. இதை யொட்டி டுவிட்டரில் பதிவிட்ட திரு மோடி, இந்தியா விரும்பும் கட்சியாக பாஜக உருவாகியுள்ளது என்றார்.