புதுச்சேரி: புதுச்சேரியில் சாலை விதிமீறல் அபராதமாக கடந்த 4 மாதங்களில் 48 லட்ச ரூபாய் வரை வசூலிக்கப்பட்டுள்ளது. அதிவேகம், கைபேசியில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவது உள்ளிட்ட விதி மீறல்களால் வாகன விபத்துகள் அதிகரித்து வருகின்றன. அதனால் உடனடி அபராதம் விதிக்கும் முறையை புதுச்சேரி அரசு கொண்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த 4 மாதங்களில் மட்டும் போக்கு வரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட 47,958 பேரிடமிருந்து 48 லட்ச ரூபாய் வரை அபரா தம் வசூல் செய்யப்பட்டுள்ள தாக புதுச்சேரி போக்குவரத்து போலிசார் தெரிவித்துள்ளனர்.