காணொளி: உத்தரப் பிரதேசத்தில் இளையரை அடித்த போலிஸ் அதிகாரிகள்

உத்தரப் பிரதேசத்தின் சித்தார்த் நாகர் மாவட்டத்தில் இளையர் ஒருவரைக் கடுமையாகத் தாக்கியதன் தொடர்பில் போலிசார் இருவர் தற்காலிகமாக வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இளையருடன் இருந்த சிறுவன், அந்தச் சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்திருப்பது வழிப்போக்கர் எடுத்த காணொளி ஒன்றில் தென்படுகிறது. அந்தக் காணொளி தற்போது சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

Remote video URL

பாதிக்கப்பட்ட இளையரை போலிசார் ஏன் தாக்கினர் என்பது இதுவரை தெளிவாக அறியப்படவில்லை. சிறுவனுடன் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இளையரின் அடையாளத்தைச் சோதனையிட போலிசார் அவரை நிறுத்தியபோது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் மூண்டதாகக் கூறப்படுகிறது.

போலிசாரில் ஒருவர் அந்த இளையரைத் தரைமீது அழுத்தி அவர் மீது அமர்ந்துகொண்டதை அந்தக் காணொளி காட்டுகிறது. தமது மோட்டார் சைக்கிளின் திறவுகோலைப் பறிமுதல் செய்ய அந்த இளையர் போலிசாரை அனுமதிக்கவில்லை. “நான் என்ன தவறு செய்தேன்” என்று அந்த இளையர் போலிசாரிடம் பலமுறை கேட்டது காணொளியில் பதிவானது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!