இருநாட்டுத் தலைவர்களும் எந்தக் குறிப்புகளும் வைத்துக்கொள்ளாமலேயே உரையாடியதால். இந்தச் சந்திப்பின்போது மோடி மற்றும் சீன அதிபருடன் மேலும் இரண்டு பேர் உடனிருந்தனர். அதில் ஒருவர் சீனர். இன்னொருவர் இந்தியர்.
மது சுதன் ரவீந்திரன் எனும் இந்திய அதிகாரி, இரு தலைவர்களுக்குமான மொழிபெயர்ப்பாளராகச் செயல்பட்டு வந்தார்.
மது சுதன் சீன தலைநகர் பெய்ஜிங்கில் இருக்கும் இந்திய தூதரகத்தின் முதன்மை செயலர். கடந்த ஆண்டு சீனாவில் நடைபெற்ற மோடி - ஜின்பிங் சந்திப்பில் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றினார் மது சுதன்.
தற்போதும், அவரே மோடி - ஜின்பிங் சந்திப்பின்போது மொழிபெயர்ப்பாளராகப் பணியமர்த்தப்பட்டுள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்த மது சுதன் இந்திய வெளியுறவுப் பணியில் (IFS) 2007ம் ஆண்டு பேட்ச் அதிகாரி ஆவார். பணியில் பெரும்பாலான நாட்களை சீனாவில் கழித்த மது சுதனுக்கு, முதல் பணியே சீனாவில் உள்ள இந்திய தூதரகத்தின் மூன்றாம் நிலை செயலராகத்தான் வழங்கப்பட்டது.
- செய்தி: இந்திய ஊடகம்