மும்பை: மகாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்களில் வரும் அக்டோபர் 21ஆம் தேதியன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாஜகவும் காங்கிரஸ் கட்சியும் அம்மாநிலங்களில் நேற்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டன.
யவத்மாலில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பேசுகையில், “மோடி அரசு அதிகாரத்தில் இருக்கும்வரை வேலைவாய்ப்பின்மை பிரச்சினை தீர்க்கப்படாது. அடுத்த 6 மாதங்களில் வேலையில்லா இளைஞர்கள் இரு மடங்காக அதிகரித்துவிடுவார்கள்,” என்றார்.
அரியானா மாநிலம், சார்கி தாத்ரி என்ற நகரில் பிரதமர் மோடி பேசுகையில், “70 ஆண்டுகளாக இந்தியாவிற்கும் அரியானா விவசாயிகளுக்கும் சொந்தமான நீர் பாகிஸ்தானுக்குப் பாய்ந்தது. இனி இந்திய விவசாயி களுக்குச் சொந்தமான நீரை பாகிஸ்தான் பக்கம் செல்லவிடாமல் தடுப்போம். இந்த நீர் இந்திய விவசாயி களின் நிலங்களுக்கும் மக்களின் வீடுகளுக்கும் கொண்டு வரப்படும்,” என்று உறுதி அளித்தார்.