கொரோனா தடுப்பு மருந்து; ஆராய்ச்சியாளர்களுக்கு மோடி புகழாரம்

புது­டெல்லி: கொரோனா கிருமித்­தொற்­றுக்கு தடுப்பு மருந்து கண்­டு­பி­டிக்­கும் முயற்­சி­யில் ஆராய்ச்­சி­யா­ளர்­கள், மருந்து நிறு­வ­னங்­கள், மத்­திய அரசு ஆகி­யவை இணைந்து செயல்­ப­டு­வ­தாக பிரதமர் மோடி தெரி­வித்­துள்­ளார்.

இந்­தத் தடுப்பு மருந்­தைக் கண்டு­பி­டிப்­ப­தற்­கான ஆராய்ச்சி எந்த நிலை­யில் உள்ளது என்­பது குறித்து பல்­வேறு மருந்து உற்­பத்தி நிறு­வன பிர­தி­நி­தி­க­ளு­டன் பிர­த­மர் நரேந்­திர மோடி ஆலோ­சனை நடத்­தி­னார். அப்­போது பேசிய அவர், மருந்து கட்­டுப்­பாடு நடை­மு­றை­கள் காலத்­துக்கு ஒவ்­வாத வகை­யில் உள்­ள­தா­கக் குறிப்­பிட்­டார்.

கடி­ன­மான அந்த நடை­மு­றை­களை மாற்ற வேண்­டும் என்­றும் பிர­த­மர் மோடி வலி­யு­றுத்­தி­னார்.

“கொரோனா தடுப்பு மருந்­தைக் கண்­டு­பி­டிப்­ப­தற்­கான முத்­த­ரப்பு ஒருங்­கி­ணைப்பை மேம்­ப­டுத்த வேண்­டும். ஆராய்ச்­சியை தீவிரப் படுத்த வேண்­டும். அறி­வி­யல் ஆராய்ச்­சி­யில் உல­கின் தலை சிறந்த நாடு இந்­தியா என்­பதை நாம் நிரூ­பிக்க வேண்­டும்,” என்றார் பிர­த­மர் மோடி.

தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கு பிரதமர் புகழாரம் சூட்டியதாக ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற மூத்த அதிகாரி தெரிவித்ததாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

“அமெ­ரிக்கா, ஐரோப்­பிய நாடு­களில் புதிய மருந்­து­களை அவ­ச­ர­கால அடிப்­ப­டை­யில் சோதனை செய்ய அந்த நாட்டு சட்­டங்­கள் அனு­ம­திக்­கின்­றன. ஆனால் இந்­தி­யா­வில் புதிய மருந்துகளை விலங்­கு­க­ளுக்கு அளித்து சோதனை நடத்­து­வ­தற்­குக்­கூட பல மாதங்­கள் ஆகின்­றன,” என்று பிர­த­மர் தமது ஆதங்­கத்தை வெளிப்­ப­டுத்­தி­னார் என்று அந்த அதி­காரி குறிப்­பிட்­ட­தாக அச்­செய்தி மேலும் தெரி­விக்­கிறது.

இதற்­கி­டையே கொரோனா கிருமிப் பர­வல் தடுப்பு பணி­யில் உள்ள காவல்­து­றை­யி­னர், மருத்­து­வர்­கள் மற்­றும் தூய்மைப் பணி­யா­ளர்­கள் பாராட்­டுக்­குரியவர்­கள் என பிர­த­மர் மோடி கூறி­யுள்­ளார்.

புத்த பூர்­ணி­மாவை முன்­னிட்டு நடந்த நிகழ்ச்­சி­யில் காணொளி வசதி மூலம் பங்­கேற்­றுப் பேசி­ய­போதே அவர் இவ்­வாறு குறிப்­பிட்­டார்.

“கொரோனா கிரு­மியை வெற்றி கொள்ள அனை­வ­ரும் இணைந்து செயல்­பட வேண்­டும். மனித நேயத்­திற்­கா­க­வும் உலக நாடு­க­ளுக்­கா­க­வும் இந்­தியா உழைத்து வரு­கிறது. நோய்ப்­ப­ர­வல் தடுப்­புப் பணி­யில் உள்­ள­வர்­க­ளுக்கு தலை­வ­ணங்­கு­கி­றேன்,” என்­றார் பிர­த­மர் மோடி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!