திரைப்பட பாணியில் சாகசம் செய்த போலிசுக்கு அபராதம்

இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலம் டாமோ மாவட்டம் நரசிங்கார் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக இருப்பவர் மனோஜ் யாதவ்.

அவர் ‘சிங்கம்’ இந்தி திரைப்படத்தில் நடிகர் அஜய் தேவ்கன், 2 ஓடும் கார்களின்மீது ஒரே நேரத்தில் நின்றபடி சாகசம் செய்வதைப்போல், தானும் செய்து அதை காணொளியாகப் படம் பிடித்து சமூக ஊடகங்களில் வெளியிட்டார்.

அந்த காணொளி வேகமாக பரவியது. இத்தகைய நடவடிக்கை இளைஞர்களுக்கு தவறான எண்ண ஓட்டத்தை வளர்க்கும் என்பதால், இதுகுறித்து விசாரணை நடத்துமாறு டாமோ மாவட்ட போலிஸ் கண்காணிப்பாளர் ஹேமந்த் சவுகனுக்கு உத்தரவிடப்பட்டது.

அதன்படி மேற்கொண்ட விசாரணையில் ஹேமந்த் சவுகன், துணை ஆய்வாளர் மனோஜ் யாதவுக்கு ரூ.5,000 அபராதம் விதித்தார். மறுபடியும் இதுபோல் செய்யக்கூடாது என்று எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!