இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலம் டாமோ மாவட்டம் நரசிங்கார் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக இருப்பவர் மனோஜ் யாதவ்.
அவர் ‘சிங்கம்’ இந்தி திரைப்படத்தில் நடிகர் அஜய் தேவ்கன், 2 ஓடும் கார்களின்மீது ஒரே நேரத்தில் நின்றபடி சாகசம் செய்வதைப்போல், தானும் செய்து அதை காணொளியாகப் படம் பிடித்து சமூக ஊடகங்களில் வெளியிட்டார்.
அந்த காணொளி வேகமாக பரவியது. இத்தகைய நடவடிக்கை இளைஞர்களுக்கு தவறான எண்ண ஓட்டத்தை வளர்க்கும் என்பதால், இதுகுறித்து விசாரணை நடத்துமாறு டாமோ மாவட்ட போலிஸ் கண்காணிப்பாளர் ஹேமந்த் சவுகனுக்கு உத்தரவிடப்பட்டது.
அதன்படி மேற்கொண்ட விசாரணையில் ஹேமந்த் சவுகன், துணை ஆய்வாளர் மனோஜ் யாதவுக்கு ரூ.5,000 அபராதம் விதித்தார். மறுபடியும் இதுபோல் செய்யக்கூடாது என்று எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.