கட்டுப்பாடுகளுடன் திருப்பதி கோவிலில் பக்தர்களை அனுமதிக்க வாய்ப்பு

கோவில்களில் பக்தர்கள் வழக்கமான முறையில் சாமி தரிசனம் செய்வதற்கு மத்திய மாநில அரசுகள் அனுமதி அளித்தால் ஏழுமலையான் கோவில் உட்பட திருப்பதி தேவஸ்தானத்துக்குச் சொந்தமான அனைத்துக் கோவில்களும் உடனுக்குடன் திறக்கப்பட இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை தேவஸ்தானம் செய்யத் தொடங்கி இருப்பதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

கோவிலில் தினமும் 14 மணி நேரம் மட்டும் பக்தர்களை சாமி தரிசனத்திற்கு அனுமதிப்பது, ஒரு மணி நேரத்துக்கு 500 பேருக்கு மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி என்ற கணக்கில் பக்தர்களை சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வைப்பது, சிறப்பு தரிசனத்துக்கான அனுமதிச்சீட்டுகளை இணையம் வழி விற்பது, அதில் தரிசனத்துக்கான நேரத்தைக் குறிப்பிடுவது, தினமும் 7 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகளைத் திருப்பதி தேவஸ்தானம் எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

மேலும் ஏழுமலையான் கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட உள்ளது.

திருமலைக்குச் செல்லும் அனைத்து வாகனங்கள் மீதும் கிருமிநாசினி தெளிக்கப்படும் என்றும், திருமலையின் அனைத்துப் பகுதிகளிலும் பக்தர்கள் கட்டாயமாக சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது வலியுறுத்தப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!