புதுடெல்லி: இந்தியாவில் அசுர வேகத்தில் அதிகரித்து வரும் கொவிட்-19 கிருமித் தொற்றால் 6 லட்சத்துக்கும் மேலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனினும் இத்தொற்றின் பாதிப்பில் இருந்து 3.59 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, “இந்தியாவில் இதுவரை 6,04,641 பேர் கிருமித் தொற் றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 17,834 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 3,59,860 பேர் கொவிட்-19 கிருமி பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 11,881 பேர் குண மடைந்துள்ளனர். நாடு முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 2,26,947 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,80,298 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 94,049 பேருக்கும் டெல்லியில் 89,802 பேருக்கும் தொற்று பரவியிருப்பது உறுதியாகி உள்ளது.
கொரோனா பாதிப்பு தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே ஒரே நாளில் சுமார் 4,000 பேர் வரை அதிகரித்துள்ளது.
கிருமியால் பாதிக்கப்பட்ட வர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்க உள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 94,049ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மொத்த பாதிப்பு 60,533ஆக அதிகரித்துள்ளது. இதன்மூலம் உயிரிழப்பு தமிழகத்தில் 1,264 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 52,926 ஆக உயர்ந்துள்ளது.