பெங்களூரு: கர்நாடகாவின் பெங்களூரு நகரில் ஒன்பது மருத்துவ மனைகள் சிகிச்சை அளிக்க மறுத்ததால் ஆடவர் ஒருவர் மரண மடைந்தது குறித்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்று பிபிசி செய்தி தெரிவித்தது.
சிகிச்சைக்கு மறுத்த பல மருத்துவமனைகளில் கடைசி மருத்துவமனையின் வாசலில் கடைசி மூச்சைவிட்டு 52 வயது பாவர்லால் மரணமடைந்தார்.
பாவர்லாலுக்கு கொவிட்-19 பாதிப்பு போன்ற அறிகுறிகள் தென்பட்டன. உடனே அவரது சகோதரர் தினேஷ் சுஜானி ஸ்கூட்டரில் உட்கார வைத்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பகவான் மஹாவீர் மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றார்.
“நாடித் துடிப்பு குறைந்து வருகிறது, மூச்சுவிட சிரமப்படுகிறார் என்று கூறினேன். ஆனால் சிகிச்சையளிக்க ஊழியர்கள் மறுத்துவிட்டனர்,” என்றார். இப்படியே அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளும் சிகிச்சையளிக்க மறுத்துவிட்டதாகவும் அவர் சொன்னார். இதையடுத்து குறைந்தது ஒன்பது மருத்துவமனைகளுக்கு கர்நாடகா அரசாங்கம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளது.
மற்றொரு சம்பவத்தில் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டு உயி ரிழந்த 64 வயது முதியவரின் உடல் வீட்டுக்கு அருகே சாலையில் நான்கு மணி நேரமாக கிடந்ததால் பலர் அதிச்சியடைந்தனர். மருத்துவ வாகனம் வர தாமதமானது என பின்னர் காரணம் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே இந்தியாவில் இதுவரை 64,8315 பேர் கிருமி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 22,771 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 18,655ஆக அதிகரித் துள்ளது.