திருவனந்தபுரம்: தங்கக் கடத்தல் தொடர்பாக தேடப்பட்டு வந்த கேரள அரசு அதிகாரி சுவப்னா (படம்) பெங்களூருவில் வைத்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவருடன் மேலும் இருவர் பிடிபட்டுள்ளனர். சந்தீப் என்பவரின் உதவியுடன் சுவப்னா தமது குடும்பத்துடன் நாகாலாந்து தப்பிச்செல்ல திட்டமிட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது.
திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு சிற்றரசின் தூதரகத்தின் பெயரில் வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது 30 கிலோ தங்கம் பறிமுதல் ஆனது. விசாரணையில் கேரள அரசுத் துறை அதிகாரியான சுவப்னாவுக்கு இக்கடத்தலில் தொடர் பிருப்பது தெரியவந்தது.
இவர் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு நெருக்கமானவர் என்று கூறப்பட்ட நிலையில் திடீரென தலைமறைவானார் சுவப்னா.
இந்த வழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வு முகமை தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டஇதையடுத்து சுவப்னாவுக்கு வலைவீசப்பட்டது. அவர் தமிழகத்திற்கு தப்பிச் சென்றதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில் பெங்களூருவில் வைத்து அவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அவருடன் இருந்த சந்தீப் என்பவரும் தனது நண்பர் ஒருவருடன் கைதானார்.