இந்தியாவின் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தளங்களில் ஒன்றான தாஜ்மகால் இன்று மீண்டும் பொதுமக்களுக்குத் திறக்கப்பட்டது. முகலாய மன்னர்களின் காலத்தில் கட்டப்பட்ட அந்தக் கல்லறை வளாகம் கொவிட்-19 அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் 17- ஆம் தேதி முதல் இன்றுவரை மூடப்பட்டிருந்து.
தாஜ்மகாலை பார்வையிட ஒரு நாளைக்கு 5,000 பேர் அனுமதிக்கப்படுவர். சமூக இடைவெளி முறை, கை சுத்திகரிப்பானின் பயன்பாடு போன்ற சில அடிப்படையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கடைபிடிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.